Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை.. வெளியான அதிர்ச்சி பின்னணி..

Nandhinipriya Ganeshan October 25, 2022 & 16:20 [IST]
காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை.. வெளியான அதிர்ச்சி பின்னணி.. Representative Image.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியபாளையம் கிராமம் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவில் தைலமரக்காடு அமைந்து இருக்கிறது. அங்கு மழை காரணமாக அதிகளவில் காளான்கள் வளர்ந்து இருந்துள்ளன. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவரது மனைவி கண்ணகி (வயது 50) மற்றும் கலைமணி என்பவரது மனைவி மலர்விழி (வயது 29) இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை காலை (அக்.21) காளான் பறிக்கச் சென்றுள்ளனர். 

அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் காளான்களை பறிக்க சைக்கிளில் சென்ற இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் ஊர் முழுவதும், தைலமரக்காட்டிலும் தேடி அலைந்து உள்ளனர். அப்போது அவர்கள் பெரியபாளையத்தில் இருந்து கழுவதொண்டி செல்லும் சாலையில் இருவரும் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே காளான் பறிக்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் வயலுக்கு சென்று தேடிப்பார்த்தனர். 

காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை.. வெளியான அதிர்ச்சி பின்னணி.. Representative Image

அப்போது இரண்டு பெண்களின் உடல்களும் முகங்கள் சிதைக்கப்பட்டு அறிவாளால் வெட்டப்பட்டு கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இக்கொடூர சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மலர்விழி கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சங்கிலி திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே நகைக்காக இரட்டை கொலை அரங்கேறியுள்ளதாக அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை நடந்துள்ளதாக என பல்வேறு காரணங்களில் போலீஸார் விசாரித்து வந்தனர். தற்போது, இந்த விசாரணையில் ஒரு பகீர் பின்னணி வெளியாகியுள்ளது. 

காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை.. வெளியான அதிர்ச்சி பின்னணி.. Representative Image

அதாவது, கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் தீபாவளிக்கு அதே பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது புதரின் நடுவில் காளான் பறித்துக்கொண்டு இருந்த மலர்விழியை முயல் என நினைத்து சுளுக்கி  ஆயுதம்‌ மூலம் தாக்கி மலர்விழியை கொலை செய்துள்ளார். இதனை பார்த்த கண்ணகி  சத்தம் போட்டு கணவருக்கு போன் செய்துள்ளார்.

போனை எடுக்காததால் கண்ணகி கொலை கொலை என சத்தம் போட்டுள்ளார். எங்கு மாட்டிக்கொள்வோமோ என்று பயந்துபோன பால்ராஜ் கண்ணகியையும் கொலை செய்துள்ளார். மேலும் பால்ராஜ் நாட்டு துப்பாக்கி வைத்து இருந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முயல் என்று நினைத்து பெண்ணை கொலை செய்தது மட்டுமல்லாமல், அதை பார்த்த மற்றொரு பெண்ணையும் தீர்த்துக்கட்டி முகங்களை சிதைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்