பனாமாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து காரணமாக 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பனாமாவில், நேற்று அதிகாலை மலையில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்று பேருந்து ஒன்று புறப்பட்டது. இது, கொலம்பியாவை மத்திய அமெரிக்காவுடன் இணைக்கக் கூடிய ஆபத்தான காட்டுப்பகுதியான டேரியன் கேப் வழியாக சென்ற பேருந்து கோஸ்டாரிகாவின் எல்லையை ஒட்டியுள்ள மேற்கு கடற்கரை மாகாணமான சிரிக்கியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது பயங்கர சத்தத்துடன் பேருந்து மலையில் இருந்து சரிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். ஆனால், அதற்கு முன்பாகவே பேருந்தில் சென்ற 66 பயணிகளில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயங்களுட்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…