பொதுவாக பெண்களை கடத்தி பலாத்காரம் செய்யும் சம்பவம் தான் கேள்விப்பட்டு இருப்போம். இதுவரை அதிகம் நடக்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தரில் 4 பெண்கள் ஒரு இளைஞனை பலாத்காரம் செய்த கொடுமை (Punjabi Boy Raped) நடந்துள்ளது. முகவரி கேட்பது போல் நடித்து கடத்தி சென்றதாக இளைஞர் கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அமிர்தசரஸ் என்ற இளைஞன் பஞ்சாபில் ஜலந்தரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் பணியை முடித்து வீடு திரும்பு கொண்டிருந்த போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர்.
இதனையடுத்து அவரிடம் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்த பெண்கள் முகவரி விவரம் குறித்து கேட்பது போல வந்துள்ளனர். அந்த சீட்டையை வாங்கி படித்துள்ளார், உடனே அந்த பெண்கள் ஸ்பிரே ஒன்றை அவர் மீது அடித்துள்ளனர். பின் மயக்கம் அடைந்த இளைஞனை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு பறந்துள்ளனர்.
ஒரு மறைவான இடத்தில் காரை நிறுத்தி இளைஞனின் கை மற்றும் கால்களைக் கட்டி பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் இளைஞனின் கை மற்றும் கண்களையும் கட்டி ஏதோ இடத்தில் இறக்கிவிட்டு தப்பித்துள்ளனர்.
இவ்வாறு நடந்த சம்பவம் குறித்து இளைஞன் வாக்குமூலம் கொடுத்தார். மேலும் அந்த பெண்கள் குடிபோதையில் இருந்ததும் இளைஞரின் வாக்குமூலத்தில் தெரிய வந்தது. அந்த பெண்களின் அடையாளமாக அந்த இளைஞர் கூறுவது அவர் நன்றாக ஆங்கிலம் பேசினர், அதில் 2 பெண்கள் பஞ்சாப் மொழியில் பேசினார்கள் என்று கூறினார். ஊடகங்களில் பரவிய இளைஞரின் பேட்டி அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…