Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கழுத்தறுத்து 6 பேர் பலி... பண்டிகையில் சோகம்..

Nandhinipriya Ganeshan Updated:
கழுத்தறுத்து 6 பேர் பலி... பண்டிகையில் சோகம்..Representative Image.

குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தியையொட்டி உத்தராயண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது மக்கள் வண்ண வண்ண காற்றாடிகளை பறக்கவிட்டு பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த வழக்கத்தால் சில துயர சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறிவிடுகிறது. அதாவது, குஜராத் மாநிலத்தின் பவநகரில் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கீர்த்த என்ற 2 வயது சிறுமியின் கழுத்தை காற்றாடியின் மாஞ்சா நூல் அறுத்ததில் அச்சிறுமி பரிதாமாக உயிரிழந்தார்.

அதேபோல், விஸ்நகரில் தனது தாயுடன் தெருவில் நடந்து சென்ற கிஸ்மத் என்ற 3 வயது பெண்குழந்தை, காற்றாடி நூலால் கழுத்து அறுக்கப்பட்ட பரிதாமாக உயிரிழந்தார். இதே மாதிரி, ராஜ்கோட் நகரில் ரிஷப்  வர்மா (வயது 7), வதோதரா, கட்ச், காந்திநகர் மாவட்டங்களில் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது 3 பேர் காற்றாடி நூல் அறுபட்டு இறந்துள்ளனர். 

மேலும், உயரமான இடத்தில் இருந்து காற்றாடி பறக்கவிடும்போது கீழே தடுமாறி விழுந்து 46 பேர் படுகாயமுற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்