பள்ளி மாணவன் ஒருவன், பகத் சிங் வேடத்திற்காக ஒத்திகை பார்த்த போது, எதிர்பாராத விதமாக தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் கௌடா. இவருக்கு வயது 12. இந்த சிறுவன், தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக இருந்த நிலையில், இவரும் பங்கேற்க பெயர் கொடுத்துள்ளார். மேலும், இந்த விழாவில் பகத் சிங் வேடமணிய முடிவெடுத்து, அதற்கான ஒத்திகைகளையும் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் பகத் சிங் நாடகத்தை ஒத்திகை செய்து பார்த்துள்ளார்.
அந்த சமயம் பார்த்து, அவரது பெற்றோர் இருவருமே வேலை காரணமாக வீட்டில் இல்லாமல் இருந்துள்ளனர். இதனால், தனியாக இருந்த நிலையில், பகத் சிங் தூக்கு மேடை நிகழ்வை ஒத்திகை பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்கு கயிறு மாட்டில், சிருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோர் இதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதனைத் தொடர்ந்து, சிறுவனின் உடலைக் கைப்பற்றி காவல்துறை, உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து, சிறுவன் படித்த தலைமை ஆசிரியர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பள்ளி தரப்பில் மாணவனிடம் பகத் சிங் வேடம் அணியும் படி கூறவில்லை எனவும், சிறுவனே ஆர்வத்தில் பகத் சிங் வேடத்தைத் தேர்வு செய்தார் எனவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் வேதனையைத் தருகிறது என்று கூறினார். சற்றும் எதிர்பாராத வகையில், சிறுவனுக்கு நேர்ந்த இந்த மரணம், பெற்றோர், உறவினர் மட்டுமல்லாமல், கேட்போரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…