கடந்த அக்டோபர் 13, 2022 தேதி தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் ரயிலில் தள்ளி கொலை செய்துள்ளது சம்பவம் சென்னை வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், சென்னையில் அடுத்த பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது.
சென்னையில் சூளைமேட்டின் வசித்துவரும் 18 வயது கல்லூரி மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்ற 28 வயது இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அந்த மாணவி அவரின் காதலை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த மாணவியின் அவரது தாயும் வீட்டில் தனியாக இருந்து உள்ளனர். அப்போது அவர்களது வீட்டிற்குள் புகுந்த ரஷீத் அவர்களிடம் ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். காதலை மறுத்ததால் நீ இல்லாமல் என்னால் வாழ்வே முடியாது என்று சத்தம் போட்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரஷீத் அந்த மாணவியை கடுமையாக தாக்கிக் கொல்லவும் முயற்சி செய்துள்ளார். அப்போது அம்மாணவியின் தாய் கத்திக் கூச்சல் போட்டதால் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். போகும்போது என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் நான் தான் உனக்கு தாலி கட்டுவேன், இல்லையெனில் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் சென்றிருக்கிறார்.
இதனால், பயந்த போன மாணவியும், தாயும் சூளைமேடு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து புகாரின் பேரில் விசாரனை நடத்தி அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து இளம்பெண்களை கொலை மற்றும் கொல்ல முயற்சி செய்து வருவது, தமிழ்நாட்டு பெற்றோர்களிடையே அதிர்வலையை உருவாக்கி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…