கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து சென்ற தனியார் பஸ்சும், சிவகாசி அருகே செவல்பட்டி பிஎஸ் ஆர் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேரும் கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த கோவில்பட்டியை சேர்ந்த தனியார் கல்லூரி 3 ம் ஆண்டு மாணவர்கள் செந்தில் குமார், அஜய், கீர்த்திக், ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்கள் அருண்குமார், விக்னேஷ், பேருந்தில் பயணித்த கூலித் தொழிலாளி மாடசாமி உள்ளிட்ட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மேற்கு காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மூன்று பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…