இடிபாடுகளில் சிக்கி 128 மணி நேரம் கழித்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, துருக்கியை மையமாகக் கொண்டு 7.8 என்ற ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், தற்போதைய நிலவரப்படி சுமார் 40,000-ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதில், மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றூ வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், இடிபாடுகளில் சிக்கி பல நாள்கள் ஆகியும் உயிருடன் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது எல்லோரையும் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. இந்த குழந்தை கிட்டத்தட்ட 128 மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வு துருக்கியின் அன்தாக்யா பகுதியில் நிகழ்ந்துள்ளது. மீட்கப்பட்ட குழந்தையின் வயது 2 என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…