வயதானவர்களை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டும் கும்பல், விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்.
64 வயது ஓய்வு பெற்ற வங்கி ஊழியருக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வாட்ஸ்அப்பில் தெரியாத நபரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அதில் தான் குஜராத்தை சேர்ந்த பூஜா சர்மா என்று அறிமுகம் செய்து பழக்கத்தை ஆரம்பித்தனர். அப்போது திடீரென்று ஒரு நாள் அந்த பெண் முதியவருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அவரும் அதை எடுக்க, அந்த பெண் நிர்வாணமாக இருந்து இருவரும் பேசி கொண்டிருப்பதை ரெகார்ட் செய்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் அதே வீடியோவை என்னிடம் அனுப்பி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முதியவரும் பயந்து அவள் கேட்ட 10,000/- ரூபாயை அவருக்கு அனுப்பியுள்ளார். பிறகு செப்டம்பர் 22 ஆம் தேதி தெரியாத நபரிடம் இருந்து போன் வந்தது. அதில் டெல்லி போலீஸ் சைபர் செலில் இருந்து கூப்பிடுகிறோம், நிர்வாணப் பெண்ணுடன் வீடியோ கால் பேசியதற்காக உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். சமரசமாக போக அந்த பெண் அனுப்பிய 13 பேங்க் அக்கவுண்ட்களுக்கு சுமார் 16,50,000/- அனுப்ப வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அவரும் பயந்து பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் மிரட்டல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அடுத்து உங்களின் வீடியோ யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் உப்லோஅது செய்யப்பட்டுள்ளது, அதனை எடுக்க டெல்லி சைபர் காஃப் ஒருத்தருக்கு ரூ. 1,30,000/- அனுப்பினால் வீடியோவை டெலீட் செடித்துவிடுவார்கள் என்று கூறினர். அவரும் அதை நம்பி பணத்தை அனுப்பியுள்ளார். அந்த முதியவரிடம் இருந்து இதுவரை ரூ. 17,90,000/- அந்த கும்பல் வாங்கியுள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு அது போதாமல், இன்னும் பணம் கேட்டு மிரட்டியதால் அந்த முதியவர் வேற வழி இன்றி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை மும்பை காவல் நிலையத்திற்கு இது போன்று 229 கேஸ் வந்துள்ளதாம். ஆனால் அவர்களால் இதுவரை 47 கேஸ்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததாக கூறப்படுகிறது. எனவே, உங்களுக்கு தெரியாத நம்பரில் இருந்து வரும் எந்த ஒரு போன் கால், மெசேஜ்களை முற்றிலும் நிராகரித்து விடுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…