டெல்லியில் மீண்டும் லிவிங் ரிலேஷன்ஷிப்-ல் இருந்த பெண்ணைக் கொன்று குளிர் சாதனப் பெட்டியில் மறைத்து வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த ஷ்ரத்தா மரணத்தின் தாக்கமே இன்னும் மீளாத நிலையில், தற்போது அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதற்கு தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது பல்வேறு பகுதிகளிடையே உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாஹில் (24) என்பவர், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜரில் வசிக்கக் கூடிய நிக்கி (22) என்பவரைக் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தம் நகர் பகுதியில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த போது சந்தித்தார். பின்னர், நொய்டாவில் உள்ள கல்லூரியில் இருவரும் சேர்ந்தனர். அங்கே வாடகை வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கினர். கொரோனா ஊரடங்கில் வீடு திரும்பி, மீண்டும் அவர்கள் துவாரகா பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் ஒன்றாக வாழத் தொடங்கினர்.
இதில், சாஹிலின் குடும்பத்தினர் அவரை வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர். அதே சமயம், சாஹில், நிக்கியுடனான தொடர்பை தனது குடும்பத்தினரிடமிருந்து மறைத்துள்ளார். இந்நிலையில், நிக்கி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சாஹில் உடன் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அவருக்கு பிப்ரவரி 10 ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த நிக்கி, சாஹிலுடன் சண்டையிட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது.
இந்நிலையில், சாஹல் தனது காரில் வைத்திருந்த மொபைல் போனின் டேட்டா கேபிளைக் கொண்டு நிக்கியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பிறகு, அவருக்குச் சொந்தமான தாபாவுக்குச் சென்று அங்குள்ள குளிர்சாதனப் பெட்டியில் நிக்கியின் உடலை மறைத்து வைத்துள்ளார். இந்த தாபா ஆனது, மித்ரான் கிராமத்தின் புறநகரில் உள்ள காலி இடத்தில் உள்ளது. பிறகு, அவர் தனது வீட்டிற்குச் சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஒரு வாரம் ஆகியும் நிக்கியைக் காணவில்லை என்று கிடைத்த புகாரின் அடிப்படையில், சடலத்தை குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மீட்டு, சாஹிலைப் போலீசார் கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…