ஈராக் அரசியலில் ஏற்பட்ட திடீர் மற்றம் மற்ற நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் அரசியலில் மிகவும் குழப்பமான சூழல் நிலவி வந்தது. எனவே, ஈராக்கின் தற்காலிக அதிபராக பர்ஹாம் சலே செயல்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் குர்தீஷ் இனத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் ரஷீத், ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…