Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

நடத்தையில் சந்தேகம்.. மனைவியை இரண்டு துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்.. பகீர் சம்பவம்!!

Sekar Updated:
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை இரண்டு துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்.. பகீர் சம்பவம்!!Representative Image.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள மஹாநந்தா நதி கால்வாயில் தனது மனைவியின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்து வீசிய கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகமது அன்சாருல் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், தனது மனைவி காணாமல் போன பத்து நாட்களுக்குப் பிறகு, போலீஸ் விசாரணையின் போது இதை ஒப்புக்கொண்டார். முன்னதாக, இறந்த ரேணுகா காதுனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி புகார் அளித்திருந்தனர்.

போலீஸ் விசாரணையின் போது, ரேணுகாவின் கணவர் அன்சாருல், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கொன்று, இரண்டு துண்டுகளாக வெட்டி, சிலிகுரி பகுதியில் உள்ள பன்சிடேவா பிளாக்கில் உள்ள கோல்டுலி அருகே உள்ள மஹாநந்தா கால்வாயில் அவரது உடல் பாகங்களை வீசியதை ஒப்புக்கொண்டார்.

கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர் தரப்பின் கூற்றுப்படி, குடும்பப் பிரச்சனைகள் காரணமாக அன்சாருல் தனது மனைவியைக் கொன்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து ரேணுகாவின் உறவினர் செலிம் கூறுகையில், “ரேணுகா காதுனின் கணவர் அன்சாருல்தான் அவரைக் கொன்று அவரது உடல் உறுப்புகளை மகாநந்தா நதி கால்வாயில் வீசியது எங்களுக்குத் தெரிய வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குடும்ப பிரச்சனைகள் இருந்து வந்தன. அவரை தூக்கிலிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்றார்.

உள்ளூர் காவல் துறையினர் சிவில் பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியுடன் உடல் உறுப்புகளைக் கண்டறிந்து மீட்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு டெல்லியில் அப்டாப் பூனாவாலா என்ற நபர் தனது லிவ்-இன் பார்ட்னர் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படும் வழக்கை டெல்லி போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கில் அப்டாப் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்