Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கோர விபத்து.. ஒரே மாதத்தில் இரண்டாவது சம்பவம்!!

Sekar October 21, 2022 & 14:30 [IST]
இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கோர விபத்து.. ஒரே மாதத்தில் இரண்டாவது சம்பவம்!!Representative Image.

அருணாச்சலப் பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. தகவல்களின்படி, மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் மிக்கிங் கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. 

விபத்து நடந்த இடம் எந்த சாலையாலும் இணைக்கப்படவில்லை. எனினும் ஒரு மீட்புக் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மேல் சியாங் மூத்த காவலர் ஜும்மர் பாசார் கூறினார்.

ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், இன்று காலை லிகாபாலியில் இருந்து புறப்பட்ட பிறகு வழக்கமான பயணத்தில் இருந்தது. காலை 10.43 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு தொங்கு பாலத்தைத் தவிர, கிராமத்திற்குச் செல்லும் வாகனச் சாலைகள் எதுவும் இல்லாததால், ராணுவம் மற்றும் விமானப் படையின் மூன்று கூட்டுக் குழுக்கள் ஒரு எம்ஐ-17 மற்றும் இரண்டு துருவ் ஹெலிகாப்டர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. உள்ளூர் கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து மிகவும் கவலையளிக்கும் செய்தி கிடைத்தது. எனது ஆழ்ந்த பிரார்த்தனைகள்" என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதத்தில் அருணாச்சல பிரதேசத்தில் நடந்த இரண்டாவது ஹெலிகாப்டர் விபத்து இதுவாகும். இந்த மாத தொடக்கத்தில், தவாங் அருகே சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்