சட்டப்பேரவை கூட்டம் இரண்டாவது நாளாக இன்று கூடியுள்ளது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், நேற்று சட்டப்பேரவையில் இபிஎஸ் தரப்பு பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இன்று இருதரப்பு எம்எல்ஏக்களும் இன்று சட்டபேரவைக்கு வருகை தந்தனர்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கியில் இபிஎஸ்சும், துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ்சும் அருகருகே அமர்ந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தை கூட பார்த்துக் கொள்ளவில்லை. ஓபிஎஸ் முன்னிலையிலேயே அவரை நீக்கிவிட்டு உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அவர்கள் இபிஎஸ் தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…