காந்தி நகர்: அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் மணிக்கு 60-80கிலோ மீட்டர் வேகத்தில் கட்ச் கடற்கரை பகுதியில் கரையைக் கடந்து வருகிறது.
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரம் உள்ள சுமார் 1லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கட்ச் கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. மணிக்கு 60-80கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது.
நள்ளிரவு வரை இந்த புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…