தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசு நியாயவிலை கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் ரேஷன் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன்கடை ஊழியர்கள், அகவிலைப்படி உயர்வு, நியாயவிலை கடைகளுக்கு தனித்துவ பொட்டல முறை ஆகிய ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவது வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பின் படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகத்தினர் ஆயத்தக் கூட்டத்தில் வருகிற ஜூன்7, 8,9 ஆகிய 3 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து ஜூன் 13 முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஜூன் 7 முதல் 9 தேதி மூன்று நாட்களும் அதன் பின்னர் ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூன் 7 ஆம் தேதிக்கு முன்னர் பொதியமாக்கல் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…