கடந்த அக்டோபர் 25 ஆம் நாள் அதாவது தீபாவளிக்கு அடுத்த தினத்தில் பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதனை அடுத்து, நவம்பர் 8 ஆம் நாள் அன்று முழு சந்திர கிரகணம் நிகழவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பூமியின் நிழலில் முழு நிலவும் மறந்து விலகும் நிகழ்வே முழு சந்திர கிரகணம் எனப்படுகிறது. அதன் படி, சூரியன், பூமி, சந்திரன் ஒரு நேர்க்கோட்டில் சீரமைக்கும் நேரத்தில் சந்திர கிரகணம் தோன்றும்.
அதன் படி, நாளை நவம்பர் 8 ஆம் நாள் சந்திர கிரகணம் ஆனது நாளை நிகழவுள்ளதாக நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், முழு சந்திரனும், பூமியின் நிழலில் இருண்ட பகுதிக்குள் விழுவது அம்ப்ரா என அழைக்கப்படுகிறது. இந்த சமயத்தில், சந்திரன் அம்ப்ராவிற்குள் இருக்கும். அப்போது அது சிவப்பு நிறத்தைப் பெற்று, ரத்த-சிவப்பு தோற்றத்தைக் காணும் அரிய வாய்ப்பைத் தருகிறது.
மேலும், அடுத்த முழு சந்திர கிரகணம் 2025 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் நாள் நிகழும் எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு பகுதி சந்திர கிரகணமானது 2023 அக்டோபரில் நிகழும் எனக் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…