சென்னை உயர்நீதிமன்றதின் கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என். மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து, குடியரசு தலைவர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
நிரந்தர நீதிபதிகளான 9 பேருக்கும், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நூலக கூட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நாளை பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைக்கவுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…