டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார்.
கடந்த மாதம் 15, 16-ம் தேதிகளில் இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு விழாவின் போது ஜி-20 அமைப்பிற்கான தலைமை பொறுப்பு இந்தியாவிடம் வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 1ம் தேதி அன்று வல்லரசு நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது.
இதனையடுத்து 2023ம் ஆண்டிற்கான ஜி-20 மாநாடு செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் ஜி-20 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அந்த வகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஜி-20 கூட்டத்தை சிறப்பாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார். பிற்பகல் 1 மணிக்கு டெல்லி சென்றடையும் முதல்வர், மாலை 5 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…