கேரள மாநிலத்தில் மாணவிகளை ஈவ் டீசிங் செய்ததை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்களைக் கேலி செய்யும் ஈவ் டீசிங் எதிர்த்து பெண்கள் நூதன முறையில் போராட்டம் செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் நகரத்தில் 3 மூன்று பேர் கொண்ட குழு மாணவிகளிடம் ஈவ் டீசிங் செய்துள்ளது. அப்போது அவர்களைக் கேள்வி கேட்டதற்காக மாணவியையும் அவரது நண்பரையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு குற்றம் சாற்றப்பெற்றவர்களைக் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் குறைந்த நபர்களால் ஆரம்பித்த போராட்டம் தற்போது விஸ்வரூபம் கொண்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் தங்கள் தலைமுடிகளை வெட்டி எதிர்ப்பை தெரிவிப்பது சமுக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…