பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சமீபத்தில் வெளியிட்ட ட்விட்டர் பதிவால், அவர் மீது நடவடிக்கை பாயும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எப்போதும் எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்தியே பிரபலமானவர் தான் எச்.ராஜா. இவர் கடந்த செப்டம்பர் 21ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளை கண்டிக்கத் துவங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு கல்லு மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். நாய் பரிதாபமாக இறந்தது. வருத்தமாக உள்ளது. என்ன செய்வது." என போட்டிருந்தார்.
இந்நிலையில், ஸ்வப்னா சுந்தர் எனும் பெண்மணி ஹெச்.ராஜாவி ட்விட்டர் பதிவை ஆதாரமாக கொண்டு அவர் மீது விலங்குகள் நல வாரியத்தில் புகார் செய்த நிலையில், புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க விலங்கு நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மிருக வதை தடை சட்டம் 1960 பிரிவு 11 படி, தெருநாய் உட்பட எந்த விலங்கையும் துன்புறுத்துவது குற்றமாகும். இந்திய தண்டனை சட்டம் 429 படி, எந்த விலங்கையும் கொலை செய்தல், விஷம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…