Wed ,Sep 27, 2023

சென்செக்ஸ் 66,118.69
173.22sensex(0.26%)
நிஃப்டி19,716.45
51.75sensex(0.26%)
USD
81.57
Exclusive

புகார் அதிகரிப்பு: 65லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

Baskarans Updated:
புகார் அதிகரிப்பு: 65லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்Representative Image.

இந்தியாவில் தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருவதால் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது.

உலகின் பல பகுதிகளில் பெரும்பாலும் மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள ஆப்புகளில் ஒன்று வாட்ஸ்அப். மெட்டா நிறுவனம் சமீபத்தில், ஜிபி வாட்ஸ்அப் போன்ற போலியான வாட்ஸ்அப்களை பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த மே 1 முதல் மே 31 வரை மொத்தம் 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. 

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கீழ் இணங்கி, அதன் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்த கணக்குகளில், 24 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள், பயனர்களிடமிருந்து புகார்கள் வருவதற்கு முன்பே, முன்கூட்டியே தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், ஏப்ரல் மாதத்தில் 74 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்