உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் ஜலால்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது.
இன்று, அந்தப் பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலையானது மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்திய நடத்தி ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும் படி கூறினர். இதனால், பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது லத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சரமாரியாக தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. இதில், ஆபாச வார்த்தைகளால் திட்டி, போலீஸ் தாக்கியதில் ஒரு பெண், அந்த இடத்திலேயே சுருண்டு விழும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. மேலும், போராட்டக்காரர்களும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…