Corona Situation : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 3 வது அலை பரவல் குறைந்த நிலையில் விரைவில் 4 வது பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, 2 மாதத்திற்குப் பின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரொனா பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது. மேலும் கேரளாவில் நேற்று மட்டும் புதிதாக சுமார் 1197 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரொனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சுமார் 100 ஐ தாண்டியுள்ளது. இதுகுறித்து தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…