Corona Situation : இந்தியாவில் 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்தியா முழுவதும் கொரொனா பரவல் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளார் ராஜேஷ்பூசன் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தை படித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரொனா தொற்றைக் குறைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்..
மேலும், தமிழகத்தில் கொரொனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளின் படுக்கைகள், ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…