சென்னையை சேர்ந்த மஹேந்திரன் (42) மற்றும் வேலூரை சேர்ந்த தீபா (36) இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்றனர். அங்கு இருவரும் சந்தித்த பேசி பழகி காதலிக்க ஆரம்பித்தனர். மஹேந்திரனுக்கு குடும்ப தகராறு காரணமாக பதற்றம் ஏற்பட்டு Bipolar Affective Disorder- காக சிகிச்சை பெற்றார். தந்தை இறந்து சோகத்தை ஈடுகட்ட முடியாத தீபா மனா அழுத்தம் காரணமாக அங்கு சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு in-patient பிரிவில் இருந்த போது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து அரவணைத்துக் கொண்டனர்.
இது குறித்து மஹேந்திரன் கூறுவது, "தீபாவை முதலில் பாத்த போது என்னுடைய அம்மா போன்றே இருந்தார். அவருடன் பழகிய பின்பு தான் தெரிந்தது என் அம்மாவைப் போல அவரும் ஒரு ஆசிரியர் என்று. அவரின் மூலமே என்னுடைய வாழ்க்கையில் அனைத்து உறவுகளும் கிடைத்தாக நம்புவதாக கூறியுள்ளார்.”
தீபாவும் " என்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்ற ஒன்று நடக்கும் என்று கனவில் கூட நான் நினைத்து பார்க்கவில்லை எல்லாம் கனவு போல தெரிகிறது" என்றுள்ளார். இவர்களின் திருமணம் இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கோயிலில் நடைபெற்றது. இருவரும் தற்போது காப்பகத்தில் தான் பணியாற்றுவதாக கூறுகின்றனர். எங்களுடைய வாழ்க்கையை தொடங்க வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்ததாகவும், அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் காப்பக பணியாளர்கள், நண்பர்கள் வாங்கி கொடுத்தாகவும் கூறியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…