அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளரும், அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளருமான கோவை செல்வராஜ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுகவை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். அதிமுகவில் தொடர்ந்து செயல்பட வேண்டாம் என தான் முடிவெடுத்துள்ளதாகவும், அரசியலை விட்டு விலக மாட்டேன் என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி திராவிட பாரம்பரியத்தை விட்டு விடமாட்டேன் என்றும், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கோவை செல்வராஜ் இன்று திமுகவில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து பேட்டியளித்த கோவை செல்வராஜ், “14 வயதில் திமுகவில் என்னை இணைத்துக்கொண்டு வாக்குக்கேட்டேன், மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தில் மகிழ்ச்சி; 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை ஆதரித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”
எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…