மாநிலம் முழுவதும் குழந்தை திருமணம் தொடர்பான வழக்குகள் தொடர்பாக அசாம் காவல்துறை இதுவரை 1,800 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீதும், பெண்கள் மீதான மன்னிக்க முடியாத மற்றும் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இன்று காலை தொடங்கியது மற்றும் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு தொடரும் என்று சர்மா குவஹாத்தியில் ஒரு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நடவடிக்கையில் அதிகபட்சமாக துப்ரி மாவட்டத்தில் 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பார்பெட்டாவில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…