Sun ,Sep 24, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

ரேஷன் கார்டுக்கு நாளை முதல் ரூ.1,000… மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!

Gowthami Subramani Updated:
ரேஷன் கார்டுக்கு நாளை முதல் ரூ.1,000… மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!Representative Image.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே வட கிழக்குப் பருவமழை தொடங்கி, நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெள்ளக் காடாக காட்சி அளித்தது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பெய்த கனமழையில், சீர்காழி பகுதியில் கடந்த 122 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு 44 செ.மீ அளவிற்கு மழை பெய்தது.

இதனால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகினர். அதிலும் குறிப்பாக, சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மழையால் மிக அதிக பாதிப்பு உண்டானது. இதனால், இந்தப் பகுதிகளுக்குச் சென்று முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரான இரா.லலிதா, நாளை (நவம்பர் 24, 2022) முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்