Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு இது தான் காரணம்.. புது விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!!

Sekar October 12, 2022 & 18:02 [IST]
முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு இது தான் காரணம்.. புது விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!!Representative Image.

சமீபாத்தில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, நம்மவர்கள் தினமும் இன்று யாரும் புது பிரச்சினைகளை உருவாக்கி விடக் கூடாதே என்ற எண்ணத்துடன் தான் கண்விழிப்பதாகக் கூறியிருந்தது பேசுபொருளாக மாறிய நிலையில், இது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

உட்கட்சித் தேர்தலுக்கு பிறகு புதிய நிர்வாகிகளுக்குதான் திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அப்போது திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து மைக் பிடித்த முதல்வர் ஸ்டாலின், " தினமும் காலை கண்விழிக்கும்போது நம்மவர்கள் (திமுக நிர்வாகிகள்) யாரும் இன்று புது பிரச்னைகள் எதையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற எண்ணத்தோடுதான் கண் விழிக்கிறேன். இந்த எண்ணமே சமயத்தில் என்னை தம்மை தூங்கவிடாமல் கூட செய்துவிடுகிறது" என்று உருக்கமாக பேசினார்.

அவரது இந்த பேச்சு சமுக ஊடகங்களில் வைரலாக மாறிய நிலையில், சமீப காலமாக தொடர்ந்து தங்கள் பேச்சுக்கள் மூலம் சர்ச்சையில் சிக்கி வரும் மூத்த அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்டோரை மனதில் வைத்துதான் ஸ்டாலின் இவ்வாறு பேசியிருந்ததாக பொதுமக்களிடையே பேச்சு அடிபட்டது.

இந்நிலையில், திமுக நிர்வாகிகளையும், தமிழக அரசில் உள்ள மூத்த அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாத விரக்தியில் தான் ஸ்டாலின் இப்படி பேசியிருக்கிறார் என்றும் இதன் மூலம் தமிழகத்தில் காட்டாட்சி நடைபெற்று வருகிறது என்பதை முதல்வரே ஒபபுக் கொண்டுள்ளார் என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, விடிந்தால் நமக்கு அமைச்சர் பதவி இருக்குமா என அமைச்சர்கள் தான் தூக்கம் தொலைத்து வந்தனர், ஆனால் இப்போதைய முதல்வர் ஸ்டாலினோ அமைச்சர்களை எண்ணி தூக்கம் தொலைக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளார் என்று நெட்டிசன்களும் பங்கம் பண்ணி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பொதுக்குழு கூட்ட பேச்சு குறித்து அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, " முதல்வர் ஸ்டாலின் எப்போதும் மக்களை பற்றியும், எப்படி சிறப்பாக ஆட்சி நடத்தலாம் என்பது குறித்தும் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் அவர் மக்கள், ஆட்சி குறித்த சிந்தனையிலேயே இருப்பதால் தான் பொதுக்குழுவில் அவ்வாறு பேசி இருந்தார்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்