மாண்டஸ் புயலின் தற்போதைய நிலவரம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இருந்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னைக்கு தெற்கு தென் கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது மாண்டஸ் புயஸ் நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிலக்கக்கூடும், இன்று நள்ளிரவு தொடங்கி புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மகாபலிபுரத்திற்கு அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவித்தார்.
கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், கரையை கடக்கும் பொழுது 65 லிருந்து 70 கிலோமீட்டர் வேகத்தை காற்றின் வேகம் இருக்கும், மேலும், புயல் வட மேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…