Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Priyanka Hochumin November 01, 2022 & 12:05 [IST]
கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!Representative Image.

தமிழகத்தில் பருவமழை அதிகரித்து வருவதால், பல்வேறு இடங்களில் மழை அதிகரித்து வருகிறது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதேபோல் தஞ்சை, மயிலாடுதுறை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் எந்தெந்த மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் போன்ற தகவல்களைப் பற்றி பார்க்கலாம்.

 

கடந்த சனிக்கிழமையில் இருந்து தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் மொத்தம் 13 மாவட்டங்களில் பெய்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததாகவும், வேலூர், திருப்பத்தூர்,தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிற்பகலுக்கு பிறகு நன்றாக மழை பெய்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை பெய்தது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ததாக பதிவாகியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்