Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

அலெர்ட்.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு.. உடனே இதை பண்ணிடுங்க!!

Sekar Updated:
அலெர்ட்.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு.. உடனே இதை பண்ணிடுங்க!!Representative Image.

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், இதுவரை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்- ஆதார் எண் இணைப்பது கடந்த நவம்பர் மாதம் கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இலவச மின்சாரம் மற்றும் மானிய விலையில் மின்சாரம் பெறும் அனைத்து பயனர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான காலக்கெடுவாக டிசம்பர் 31 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வந்த நிலையில், கால அவகாசம் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டது.

எனினும், இன்னும் 50 லட்சம் அளவிலான மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சிரமங்களை தவிர்க்க உடனடியாக இணைத்து விடுங்கள் என அறிவுறுத்தப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்