Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.. மத்திய அரசின் திருவிழா பரிசு!!

Sekar September 28, 2022 & 17:57 [IST]
இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.. மத்திய அரசின் திருவிழா பரிசு!!Representative Image.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா (PMGKAY) என பிரபலமாக அறியப்படும் இலவச ரேஷன் திட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. PMGKAY திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மார்ச் 2020 இல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் உள்ள சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கத் தொடங்கப்பட்டது.

அப்போது கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட லாக்டவுன் காலத்தில் பயனாளிகளின் சிரமங்களைக் குறைக்க இலவச ரேஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது NFSA இன் பொது ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்தது.

இது பலமுறை நீட்டிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 30 வரை அமலில் இருந்த நிலையில், தற்போது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளதால், இலவச ரேஷன் திட்டம் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக பண்டிகைகாலமாக இருக்கும் நிலையில், இது மத்திய அரசின் திருவிழா பரிசாக பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்