Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்.. அரசு பேருந்து சேவைகள் நிறுத்தம்!!

Sekar Updated:
கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்.. அரசு பேருந்து சேவைகள் நிறுத்தம்!!Representative Image.

மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் இன்று அரசு பேருந்துகள் எதுவும் இயக்கபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த 6 மாவட்டங்களில் இன்றும் அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாண்டஸ் புயலின் தாக்கத்தால் மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்