Sat ,Sep 23, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் அக். 2ம் தேதி கிராமசபை.. தமிழக அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன?

UDHAYA KUMAR September 25, 2022 & 12:34 [IST]
தமிழகத்தில் அக். 2ம் தேதி கிராமசபை.. தமிழக அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன?Representative Image.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, கிராமங்கள் தோறும் கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவில் மற்ற எந்த நூல்களையும் தாண்டி, அதிகம் மதிக்கப்படும் மதிக்கப்படவேண்டிய நூல். அதுதான் சட்ட புத்தம். அதன்படியே இந்திய அரசின் ஒவ்வொரு அமைப்பும் நாட்டை ஆள வேண்டும். அதன்படியே நீதியும் வழங்கப்பட்டு வருகிறது. 

கிராம சபைக் கூட்டமும் அதன்படியே, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடத்தப்படவேண்டும். கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக நடத்தமுடியாமல், அல்லது கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தை இந்த ஆண்டு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டத்தினை சுழற்சி முறையில் பின்பற்றி நடத்தவேண்டும். 

கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்