குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை பேருந்தும் எஸ்யுவி காரும் மோதிய பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர்.
சூரத்தில் இருந்து பிரமுக் சுவாமி மஹராஜ் சதாப்தி மஹோத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய மக்கள் நிறைந்த பேருந்து நவ்சாரி தேசிய நெடுஞ்சாலை எண் 48 இல், டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மீது மோதியது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
மேலும் காரில் இருந்த ஒன்பது பேரில் எட்டு பேர் இறந்தனர். பேருந்தில் இருந்த 29 பேர் காயமடைந்தனர். 11 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.
"நவ்சாரியில் சாலை விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வேதனை அடைந்தேன். எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் கருணைத் தொகை இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…