மாநிலத்தில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்வதற்காக ஒரு குழுவை அமைக்க குஜராத் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத்தில் பொது சிவில் சட்ட அமலாக்கத்திற்கான குழு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று முதல் நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் என மத்திய அமைச்சர் பர்ஸோத்தம் ருபாலா தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற விஷயங்களில் அனைத்து மதச் சமூகங்களுக்கும் பொருந்தும் வகையில், இந்தியாவுக்கான ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கு ஒரே மாதிரியான சிவில் கோட் அழைப்பு விடுக்கிறது.
இந்த சட்டம் அரசியலமைப்பின் 44 வது பிரிவின் கீழ் வருகிறது. இது இந்திய எல்லை முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை பாதுகாக்க அரசு முயற்சிக்கும் என்று கூறுகிறது.
முன்னதாக உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேச அரசுகள் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முடிவை அறிவித்தன.
ஒரே மாதிரியான சிவில் கோட் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான தனி நபர் சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முன்மொழிவாகும். இது அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மதம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சமமாகப் பொருந்தும்.
கோவாவில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் உள்ள நிலையில், பாஜக ஆட்சி நடக்கும் சில மாநிலங்களில் தற்போது பொது சிவில் சட்டத்திற்கான முன்னெடுப்புகள் செய்யப்படுவது, நாடு தழுவிய பொது சிவில் சட்டத்திற்கு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.
நாட்டில் சமத்துவத்தை கொண்டு வரும் என்று பல அரசியல் தலைவர்கள் இந்த பொது சிவில் சட்டத்தை ஆதரித்தாலும், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், இது அரசியலமைப்பிற்கு எதிரான மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என்று கூறியுள்ளது.
மேலும் முஸ்லீம் தலைவர்கள் சிலர், பணவீக்கம், பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றிலிருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
தனது 2019 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில், நாடு தழுவிய பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்திருந்தாலும், ஆளும் பாஜக அரசு சமீபத்தில், பொது சிவில் சட்டம் சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…