Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

எல்லை மீறிய காதல்.. மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. கதறும் மாமனார்!!

Sekar Updated:
எல்லை மீறிய காதல்.. மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. கதறும் மாமனார்!!Representative Image.

மருமகனும் மாமியாரும் காதலித்து வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை மருமகன் இழுத்துக் கொண்டு ஓடிய நிலையில், செய்வதறியாது திகைத்த மாமனார் நீதி கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தின் அனதாரா காவல் நிலையத்தில், சியாங்காரா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் ஜோகி என்பவர் புகார் அளித்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரமேஷ் ஜோகி தனது புகாரில், தனது மகளின் கணவர் (மருமகன்) தனது மனைவியைக் கடத்திச் சென்றதாக தெரிவித்தார். 

மகளுக்கு அருகில் உள்ள மாமாவலி கிராமத்தைச் சேர்ந்த நாராயண் ஜோகி என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார் ரமேஷ் ஜோகி. இதையடுத்து அடிக்கடி மாமனார் வீட்டுக்கு வந்து சென்ற நாராயண் ஜோகிக்கு மாமியாருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி மதுபான பாட்டிலுடன் மாமியார் வீட்டிற்கு வந்த மருமகன் நாராயண், மாமனார் ரமேஷுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். ரமேஷ் போதை அதிகமாகி தூங்கிவிட்டார். 

இதையடுத்து மாலை 4 மணியளவில் கண்ணை திறந்து பார்த்த ரமேஷ் ஜோகிக்கு வீட்டில் மனைவி மற்றும் மருமகன் நாராயணன் இல்லாதது தெரிந்தது. அவர் இருவரையும் தேடிய நிலையில், எங்கும் காணவில்லை. இதையடுத்து ஜனவரி 1ஆம் தேதி மாலை ரமேஷ் தனது மனைவியைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

மருமகன் நாராயணன் தனது மனைவியை மயக்கி அழைத்துச் சென்றதாக புகார் கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாமியார் மற்றும் மருமகனை தேடி வருகின்றனர். 

மருமகனுடன் தலைமறைவான மாமியாருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதே நேரத்தில் மருமகன் நாராயணனுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். நாராயண் மாமியாருடன் ஓட்டம் பிடித்தபோது, தனது மகள்களில் ஒருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்