தமிழக கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் இன்று அதிக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் கடலுக்கு செல்வது நல்லதல்ல என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைக் குறிப்பில், கொமோரின் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்வது நல்லதல்ல எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள் மற்றும் கேரள கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் இதேபோல் காற்று வீசும் என்பதால் அங்கும் கடலுக்குள் செல்வது நல்லதல்ல என எச்சரித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…