Corona Situation : தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாநில அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. அதில், முக்கியமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கோரிக்கை வைத்துள்ளார்.
அதன்படி, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…