கலிபோர்னியாவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பஞ்சாபை சேர்ந்த இந்திய வம்சாவளி குடும்பம் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள மெர்சிட் கவுண்டியின் ஷெரிப் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு ஷெரிப் வெர்ன் வார்ன்கே, உடல்கள் மெர்சிட் கவுண்டி பழத்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினார்.
சான் பிரான்சிஸ்கோவின் தென்கிழக்கே சான் ஜோவாகின் பள்ளத்தாக்கில் உள்ள மெர்சிடில் எட்டு மாத குழந்தை ஆரோஹி தேரி, அவளது பெற்றோர் மற்றும் மாமாவை ஒரு நபர் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 48 வயதுள்ள ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கு முயன்ற அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே 20 வயதான இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள அவரது தங்குமிடத்தில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அவரது அறையில் உடன் தங்கியிருந்த கொரியாவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இண்டியானா போலிஸைச் சேர்ந்த வருண் மணீஷ் சேடா, வளாகத்தின் மேற்கு விளிம்பில் உள்ள மெக்கட்ச்சியோன் ஹாலில் இறந்து கிடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அடுத்தடுத்து இந்தியர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…