ஜார்க்கண்ட் கவர்னர் ரமேஷ் பாய்ஸ், சுரங்க ஒதுக்கீட்டில் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆதாயம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனின் பதவி காலியாக வாய்ப்புள்ளதாக சூசகமாக தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை அன்று தனது சொந்த ஊரான ராய்ப்பூரில் பேசும்போது, ஜார்கண்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள வழக்கில் இரண்டாவது கருத்தை நாடியுள்ளதாக பாய்ஸ் கூறினார். இந்த வழக்கை காரணம் காட்டி முதல்வர் சோரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநர் மிகப்பெரிய அரசியல் வெடிப்பை சூசகமாக தெரிவித்துள்ளார் ஜார்கண்டில் எந்த நேரத்திலும் அரசியல் அணுகுண்டு வெடிக்கக்கூடும் என்று அவர் கூறிய நிலையில், விரைவில் ஆளுநர் தனது முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் சோரனை சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி பாஜக தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது முடிவை ஆகஸ்ட் 25 அன்று ஜார்க்கண்ட் ஆளுநருக்கு அனுப்பியது. இது மாநிலத்தில் அரசியல் நெருக்கடியைத் தூண்டியது.
தேர்தல் ஆணையத்தின் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சுரங்க குத்தகை தொடர்பாக முதல்வரை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்ததாகவே நம்பப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…