Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சிறுமியை தூக்கிய தரையில் அடித்த நபர்.. போக்ஸோ சட்டத்தின் கீழ் களி தின்ன வைத்த கேரள போலீஸ்!!

Sekar November 19, 2022 & 11:03 [IST]
சிறுமியை தூக்கிய தரையில் அடித்த நபர்.. போக்ஸோ சட்டத்தின் கீழ் களி தின்ன வைத்த கேரள போலீஸ்!!Representative Image.

கேரளாவில் 34 வயது நபர் ஒருவர் எட்டு வயது சிறுமியை தூக்கி கடுமையாக தரையில் வீசும் வீடியோ வைரலாக மாறிய நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியிருந்த வைரல் வீடியோவில், மதரஸாவிற்கு வெளியே நின்று கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை நோக்கி அந்த நபர் நடந்து செல்வதை காட்சிகள் காட்டுகின்றன. அந்த நபர் சிறுமியை நெருங்கியதும், சிறுமி அந்த நபரிடமிருந்து  ஒரு படி விலகிச் செல்வதைக் காணலாம். 

ஆனால் அந்த நபர் சிறுமியைத் தூக்கி, தரையில் எறிந்துவிட்டு நடந்து செல்வதைக் காணலாம். இதில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நவம்பர் 17, வியாழன் அன்று காசர்கோடு மஞ்சேஷ்வரில் உள்ள இஷா-அதுல் உலூம் கேந்திரா மதரஸாவிற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் சிறுமியின் அண்டை வீட்டாரான அபூபக்கர் சித்திக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த நபரை போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் ஏன் சிறுமியை தாக்கினார் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர். முன்னதாக இதேபோன்ற ஒரு சம்பவத்தில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, கண்ணூர் தலச்சேரியில், 6 வயது சிறுவனை, ஷிஹ்ஷாத் என்ற இளைஞன், தான் நிறுத்தப்பட்டிருந்த காரில் சாய்த்ததற்காக உதைத்த வீடியோவும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்