கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை பரங்கிமலை இரயில் நிலையத்தில் சதீஸ் என்ற இளைஞர் காதல் விவகாரத்தால் தனது காதலியான சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டு படுகொலை செய்த சம்பவமே இன்னும் நெஞ்சைவிட்டு மறையவில்லை. அதற்குள் மற்றொரு கொடூர கொலை கேரளாவில் (அக்.23) அரங்கேறியுள்ளது.
Dove Shampoo: டவ், டிரஸ்மீ ஷாம்புகளை பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. புற்றுநோய் ஆபத்து..
கேரளா மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கூத்துபறம்பு அருகே உள்ள பானூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா. 23 வயதான இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆய்வகத்தில் பணிபுரிந்துவந்தார். விஷ்ணுபிரியாவின் பாட்டி ஒருவர் அண்மையில் மரணமடைந்துவிட்டார். இதனால் விஷ்ணுபிரியாவின் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அக்டோபர் 22 ஆம் தேதி இறுதிச் சடங்கிற்காக சென்றுவிட்டனர்.
அப்போது விஷ்ணுபிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் இறுதிச் சடங்கு முடித்துக் கொண்டு அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். கதவை திறந்து போட்டுவிட்டு இவள் என்ன செய்கிறாள் என கூறிக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது விஷ்ணுபிரியா கழுத்து துண்டான நிலையில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விஷ்ணுபிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இக்கொடூர சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் விஷ்ணுபிரியாவை கொலை செய்தது கூத்துபறம்பு மானந்தேரி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷியாம்ஜித் என தெரியவந்துள்ளது. இவர் விஷ்ணுபிரியாவை ஒருதலையாக 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு பிரியாவுக்கு பொன்னானி பகுதியைச் சேர்ந்த வேறொரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவரம் ஷியாம்ஜித்துக்கு தெரிய வந்தது. இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு ஷியாம்ஜித்துடன் பேசுவதை விஷ்ணு பிரியா நிறுத்திவிட்டார்.
காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை.. வெளியான அதிர்ச்சி பின்னணி..
இதனால், ஆத்திரமான ஷியாம்ஜித் எங்கே விஷ்ணுபிரியா தன்னை விட்டு போய் விடுவாரோ என்ற பயத்தில் கடந்த 23 ஆம் தேதி அவர் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துக்கொண்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். ஷியாம்ஜித்தை பார்த்ததும் விஷ்ணுபிரியா அலறியுள்ளார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் சுத்தியலால் விஷ்ணுபிரியாவின் தலையில் பலமாக அடித்து, சரமாரியாக வெட்டியும் உள்ளார். பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து கூத்துபறம்பு போலீசார் அவரை கைது செய்து தலச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே விஷ்ணு பிரியாவின் உடல் கண்ணூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது உடலில் பலமான 18 காயங்கள் இருந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் விஷ்ணு பிரியாவின் உடல் அவரது வீட்டுத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பட்டப்பகலில் பெண்களை கொடூரமாக கொலை செய்து வருவதுபோன்ற சம்பவங்கள் பெண்ணை பெற்ற பெற்றோர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…