காதலர் தின கொண்டாட்ட வாரத்தில் இரண்டாவது நாளான ப்ரப்போஸ் டே நம் மனதுக்கு மிக நெருக்கமானவரிடம் நமது அன்பு மற்றும் காதலை வெளிக்காட்டும் நாளாகும். இந்த நாளில் காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் பரிசு ஒன்றை கொடுத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல், ஒருபுறமாக (oneside) காதலிக்கும் அன்பு நெஞ்சங்களே! உங்கள் லவ்வரிடம் ப்ரப்போஸ் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. உடனே காதல் கடிதம் அனுப்புவது, செல்போனில் மெஷேஜ், வாட்ஸ் அப், வாழ்த்து அட்டை, பரிசு பொருள் வாங்கி உங்கள் மனதை கவர்ந்தவர்களிடம் காதலை சொல்லுங்க.
உன்னிடம் இடைவெளி விட்டு பேச நான் விரும்பவில்லை
நாள்பொழுதும் நீங்காது இடைவிடாமல் பேசவே விரும்புகிறேன்
என்னை ஏற்று கொள்வாயா ஆருயிரே.
அன்பே நீ சம்மதம் என்று சொல்லிப்பார்
ஏழு கடல் ஏழு மலை தாண்டினாலும் எட்டாத உயரத்தில்
எமனே எதிர்த்தாலும் எமனையும் வென்று உன்னை மீட்பேன்!
பெண்ணே உன் கண்களும் மனதும் பேசி
கொள்ளும் ஒன்றை உன் உதடு சொல்வது எப்போது?
காத்திருக்கிறேன் காலங்களில் கரைந்து என்றுமே உனக்காக..
உன் உள்ளம் என்ற ஒன்றில் நான் இருந்தால்
போதும் இந்த ஆயுள் காலம் முழுவதும்
உன்னிட உயிராய் இருப்பேன்..
உன் வாழ்க்கையில் உனக்கு துணை
புரிய ஆசை தான்.. உந்தன் கவலை கேட்கும் நட்பாய் அல்ல..
உந்தன் கவலை மறக்க, உன் துணை நிற்கும் உன் உயிராய்..
என் வாழ்க்கையை உன்னோடு உனக்காக வாழ விரும்புகிறேன் நான்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…