இந்தியாவின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் திரு, மகேந்திர சிங் தோனி தமிழ்நாட்டில் பள்ளி துவங்கியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேட்டான இருந்த இவரை தமிழ்நாட்டில் தல என்று கிரிக்கெட் ரசிகர்கள் அன்புடன் அழைப்பர். இன்னும் சொல்ல போனால் இவர் சென்னையை தன் இரண்டாவது வீடாகும்.
நம்ம தல தோனி ஸ்கூல் (Ms Dhoni Global School Hosur)
சி எஸ் கே நிறுவனம் கிரிகெட்டில் ஆர்வமுள்ள தமிழக சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு நவீன வசதி கொண்ட பயிற்சிக்கூடங்களைச் சென்னை மற்றும் சேலத்தில் தொடங்கியது. சி எஸ் கே நிறுவனத்துடன் இணைந்துள்ள எம் எஸ் தோனி தமிழ்நாட்டின் மீது உள்ள பாசத்தால் ஓசூரில் முழுநேர கிரிக்கெட் பயிற்சி பள்ளியை நேற்று (10.10.2022, திங்கட்கிழமை) துவங்கியுள்ளார்.
'எம் எஸ் தோனி குளோபல் ஸ்கூல்' என்ற பெயருடன் 4- 5 ஏக்கர் பரப்பளவில் 8 பிட்ச்கள் கொண்ட மைதானம் மற்றும் பல நவீன வசதிகள் கொண்டது. இந்த பள்ளி இந்தியாவில் 3வது மிகப்பெரிய கிரிக்கெட் பள்ளி என்ற பெருமை கொண்டதாகும். இந்தியாவில் வேறு எங்கும் இந்த பள்ளியை அமைக்காமல் தமிழ்நாட்டில் இவர் அமைத்து தானே நேரில் வந்து திறந்து வைத்திருப்பதே தோனிக்கு தமிழ்நாட்டின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்துகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…