Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

இளம் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கு - நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

Baskaran Updated:
இளம் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கு - நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனைRepresentative Image.

கன்னியாகுமரி: இளம் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் நாகர்கோவிலில் சேர்ந்த காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (26). பெண் மருத்துவர் உள்ளிட்ட பல பெண்களை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகி ஆபாசபடம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் காசியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியான காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். மேலும் அவரது லேப்டாப்பில் இருந்து 120பெண்களின் 400 ஆபாச வீடியோக்கள், 1900ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்