Tamilnadu News Live : தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரொனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் காணப்பட்டது. இந்நிலையில், 2 கட்ட முழு ஊரடங்கு போடப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரபடுத்தப்பட்டது. இதனால், கொரோனா பரவல் குறைந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளும் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.4 வகை கொரோனா தொற்று 4 பேருக்கும், பி.ஏ.5 வகை கொரோனா தொற்று 8 பேருக்கும் ஏற்பட்டுள்ளது. நாவலூர் பகுதியில் பி.ஏ.4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், உருமாறிய ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேரும் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…