Politic News : திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில், திருச்சி சிவாவின் மகன் சூர்யாவிற்க்கு தற்போது புதிய பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திருச்சி சிவா பல வருடங்களாக திமுகவின் எம்பியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், திருச்சி சிவாவின் மகன் சூர்யா திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இச்சம்பவம் திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தமிழ்நாடு பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ம்ேலும் பாஜகவில் இணைந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யாவிற்க்கு ஒரு சில நாட்களிலேயே பதவி கிடைத்துள்ளது.
இச்சம்பவம் பாஜகவின் புதிய யுத்தி என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…